குழந்தை பிறந்து எட்டு நாட்களுக்கு பிறகு தொப்புள் கொடி தானாக பிரிந்து விழும். அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வெயிலில் அதை காய வைத்தல் வேண்டும். நன்கு காய்ந்தவுடன் இடித்து பொடி செய்து ஒரு தாயத்தின் உள்ளோ அல்லது வேறு சிறு பாத்திரத்திலோ அதை அடைத்து வைக்க வேண்டும். பின் நாட்களில் குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்படும்போது பால் அல்லது தண்ணீரில் சிறிதளவு பொடி கலந்து தர உபாதைகள் நீங்கும்.
இது குழந்தைக்கு மட்டும் அல்லாது குடும்பத்திற்கும் அருமருந்தாக உதவும்.
இது நம் முன்னோர்கள் பின்பற்றிய முறையாகும். இதுவே தற்போது 'ஸ்டம் செல்' எனவும் 'அம்பிலிக்கல் கார்டு பாங்' எனவும் தனியார் நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.
இதற்கு ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கப்படும். நம் தேவைக்கும் பதிவு செய்து வாங்க நேரிடும். அவ்வாறு பெறப்படும் பொருள் நமது பொருள் என்று உறுதி செய்யவும் இயலாது. ஆகையால் நாம் நம் முன்னோர்களை பின்பற்றி வாழ்வது நலம்.



