செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

குழந்தைகளுக்கு தாயத்து அணிவிப்பதின் காரணமும் அறிவியலும்

    
         குழந்தை பிறந்தவுடன் அதன் தொப்புள் கொடியயை காயவைத்து இடித்து பொடியாக்கி அதை தயத்தினுள் வைத்து ஒரு கயிற்றில் நூர்த்து குழந்தைக்கு கழுத்தில் அணிவிப்பார்கள். இதன் நோக்கம் யாதெனில் பிற்காலத்தில் குழந்தை நோயுற்ற வேலையில், தயத்தினுள் இருக்கும் பொடியை பாலில் கலந்து  குழந்தைக்கு கொடுப்பார்கள், இதானால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகி குழந்தை உடல் நலம் சீராகும்.
          
       குழந்தைகள் வளரும் பருவத்தில் சிறிய பொருள்களை வாயில் வைத்து மெல்லும், அப்பொழுது இந்த தாயத்தையும்  மெல்வதால் இதனுள் இருக்கும் பொடி குழந்தையின் உடலில் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதுவே நம் முன்னோர்களின் அறிவியலும் வாழ்க்கை முறையும் ஆகும்.
     
      நாமோ நாகரிகம் என்ற பெயரால் தொப்புள் கொடியை தூக்கி எறிந்தோம். பின்நாட்களில் மேல்நாட்டவர் இதை 'ஸ்டெம் செல் தெரப்பி' என்று கூற அதன் முறைப்படி தொப்புள் கொடியை பாதுகாக்க வருடத்திற்கு இருபது ஆயிரம் என்று செலவு செய்து மற்றவரிடம் நிற்கின்றோம். இதுவே நாகரீகத்தால் விளைந்திருக்கும் நன்மை.
 
    நாகரிகம் என்று பெயரால் நாம் இழந்தது அறிவியல் மட்டும் இல்லை நம் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியமான எதிர்காலமும் தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொப்புள் கொடி பதப்படுத்தும் முறை

       குழந்தை பிறந்து எட்டு நாட்களுக்கு பிறகு தொப்புள் கொடி தானாக பிரிந்து விழும். அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வெயிலில் அதை காய ...