திங்கள், 21 ஜனவரி, 2019

திருநீறு இடுவதின் அறிவியலும் தத்துவமும்

     

   

        திருநீறு நாம் தினமும் இடும் ஒரு பூஜை பொருள். நாம் கோவிலுக்கு சென்றால் அங்கே அர்ச்சகர் இந்த திருநீறை அளிப்பார், நாள்தோறும் இல்லத்தில் விளக்கேற்றியபின் நம் அன்னை நமக்கு திருநீறு அளிப்பார்கள், நாம் வெளியில் செல்லும்பொழுது கட்டாயம் திருநீறு இடவேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
   
       ஆனால் இதை நாம் இடுவதின் காரணம் தான் என்ன?

       மாட்டுச்சாணத்தை உலரவைத்து அதன்பின் சாம்பல் செய்வதே இந்த திருநீறாகும். இதன் தத்துவம் யாதெனில் இதை ஒருவன் தினமும் இடும்பொழுது "தானும் ஒரு நாள் இதைபோல் சாம்பலாக நேரிடும், ஆகையால் வாழும் பொழுது ஆணவம், வன்மம், வெறுப்பு, துரோகம் என்று வாழாமல் அனைவரிடமும் அன்பு செலுத்தி நல்லொழுக்கங்களோடும், உயரிய பண்புகளோடும் வாழவேண்டும்" என்ற எண்ணத்தை விதைத்து அவனை நல்வழியில் இட்டுச்செல்வதற்காகவே திருநீறு இடும் வழக்கத்தை நம்முன்னோர்கள் முறைப்படுத்தினர்.

       இதன் அறிவியல் யாதெனில் மாட்டுச்சாணத்திலிருந்து உருவாகும் திருநீற்றில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நாம் பருகும் தண்ணீரில் ஒரு சிட்டிகை சேர்த்தால் ஆக்ஸிஜன் உள்ளடக்கத்தை அதிகரிக்கலாம். தடிப்புகள் மற்றும் தோல் எரிச்சல் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.

நண்பர்களே இதுவே திருநீறு இடுவதின் அறிவியலும் தத்துவமும் ஆகும், திருநீறு மூடநம்பிக்கை அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொப்புள் கொடி பதப்படுத்தும் முறை

       குழந்தை பிறந்து எட்டு நாட்களுக்கு பிறகு தொப்புள் கொடி தானாக பிரிந்து விழும். அதை எடுத்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வெயிலில் அதை காய ...